பசிபிக் தீவு நாடான டோங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் தீவு நாடான டோங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Updated on
1 min read

பசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இன்று காலை டோங்காவின் தெற்கே பூமிக்கு அடியில் 572 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

முதலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 6.5 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் 6.4 என அறிவிக்கப்பட்டது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in