இலங்கையில் உள்ள சம்பூரில் இந்தியா உதவியுடன் 100 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம்

இலங்கையில் உள்ள சம்பூரில் இந்தியா உதவியுடன் 100 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம்
Updated on
1 min read

இலங்கையில் 100 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஒப்பந்தம் செய்துள்ளன.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து அந்நாட்டு ராணுவம் கைப்பற்றிய முதல் இடம் சம்பூர். 2006-ம் ஆண்டு சம்பூர் பகுதியை கைப்பற்றிய பிறகு அந்த இடம் ராணுவத்தால் உயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகை யில், திரிகோணமலை மாவட்டம், சம்பூர்பகுதியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா - இலங்கை அரசுகளிடையே கடந்த 2011-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என திரிகோணமலை மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தற்போது சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க இரு நாட்டு அரசுகளும் ஒப்புக்கொண்டன.

இதற்கான நிகழ்ச்சி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இது தொடர் பான ஒப்பந்தத்தில் இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மின்சார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சிமற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in