

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் தற்போது இஸ்ரேலிலும் பரவியுள்ளது.
இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். அண்மையில் ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து இஸ்ரேல் வந்த பயணி ஒருவரிடம் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேறு இருவருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. மூவருமே தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மூவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் எத்தனை டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். எந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்ற தகவல்களைத் தெரிவிக்கவில்லை.
உலகிலேயே இஸ்ரேல் தன் நாட்டு மக்களுக்கு மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில் அங்கு தற்போது மூன்று பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வரைஸ் பரவியுள்ளது.
பி.1.1.529 பரவல் பின்னணி:
தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்திலிருந்து திடீரென கரோனா தொற்று நாள்தோறும், 1,200 அளவில் அதிகரித்து, நேற்று 2,465 ஆக அதிகரித்துவிட்டது.
முதலில் பிரிட்டோரியாவிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள், ஸ்வானே மெட்ரோ நகரம் ஆகியபகுதிகளில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதன்பின் அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது.
இந்த புதிய வகை கரோனா வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும், உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதிகமான உருமாற்றத்தை அடைகிறதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து போட்ஸ்வானா, ஹாங்காங் சென்ற பயணிகள் உடலில் இந்த கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு ஜோ பாலா தெரிவித்தார்.