கொடுத்த கடன் 1 பில்லியன் டாலரை திருப்பிக் கொடுங்கள்: பாகிஸ்தானுக்கு அமீரகம் திடீர் நெருக்கடி

கொடுத்த கடன் 1 பில்லியன் டாலரை திருப்பிக் கொடுங்கள்: பாகிஸ்தானுக்கு அமீரகம் திடீர் நெருக்கடி
Updated on
1 min read

தாங்கள் வழங்கிய 1 மில்லியன் டாலர் பணத்தை திரும்ப அளிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ பாகிஸ்தானுக்கு கடனாக சுமார் 1 பில்லியன் டாலர் கடனை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது . இதனை பாகிஸ்தான் தேசிய வங்கியில் டெபாசிட் செய்தது. இந்த நிலையில் இன்று இரவுக்குள் தாங்கள் வழங்கிய கடன் தொகையை திருப்பி அளிக்கும்படி ஐக்கிய அமீரகம் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் தொகையை அமீரகம் திருப்பி கேட்டுள்ளதால் பாகிஸ்தான் அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதாரம் சரிந்துள்ளது இந்த நிலையில் அமீரகமும் கடனை திரும்ப அளிக்கும்படி கேட்டுள்ளதால் இம்ரான் கான் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் சயித்தை சந்திக்க முயற்சி செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு அமீரகம் ஏன் திடீரென இவ்வளவு நெருக்கடி அளிக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in