அவசரக்கால பயன்பாட்டுக்கு பைசர் கரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் : உலக சுகாதார அமைப்பு

அவசரக்கால பயன்பாட்டுக்கு பைசர் கரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் : உலக சுகாதார அமைப்பு
Updated on
1 min read

பைசர் கரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் பைசர் கரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் பைசர் கரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகள் ஏற்று கொண்டது சாதகமான நிலையாகவே பார்க்கப்படுகிறது. பைசர் கரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

பைசர் கரோனா தடுப்பு மருந்து உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in