அர்ஜென்டினாவில் கரோனா பலி 40,000-ஐக் கடந்தது

அர்ஜென்டினாவில் கரோனா பலி 40,000-ஐக் கடந்தது
Updated on
1 min read

அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 40,000-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து அர்ஜென்டினா சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 40,009 ஆக அதிகரித்துள்ளது. 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. சமீபநாட்களாக கரோனா தொற்று குறைந்துள்ளது.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் இறுதி சோதனைக் கட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

கரோனாவினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் பல நாடுகளில் மீண்டும் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவுக்கு 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in