ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள தன்னார்வலர்களை நாடும் அமீரகம்

ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்திக் கொள்ள தன்னார்வலர்களை நாடும் அமீரகம்
Updated on
1 min read

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தன்னார்வலர்களை அணுகி வருகிறது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊடகம் தரப்பில் கூறும்போது, “ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தைப் பரிசோதனைக்காகச் செலுத்திக் கொள்வதற்குத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். இரண்டு டோசஸ் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள 500 தன்னார்வலர்கள் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து மட்டும் இல்லாமல் சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்தையும் 3 கட்டங்களில் மருத்துவப் பரிசோதனைக்கு ரஷ்யா உட்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கவனமாக கடைப்பிடிக்காததன் காரணமாக தொற்று அதிகரித்து வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் நல்ல முடிவைத் தந்துள்ளன. கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in