மியான்மரில் கரோனா பாதிப்பு 66,734 ஆக அதிகரிப்பு

மியான்மரில் கரோனா பாதிப்பு 66,734 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

மியான்மரில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,734 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மியான்மர் சுகாதாரத் துறை தரப்பில், “ மியான்மரில் கடந்த 24 மணி நேரத்தில் 1,136 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,734 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் 26 பேர் பலியாக பலியானவர்கள் எண்ணிக்கை 1,534 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் சமீப நாட்களாக கரோனா தீவிரம் காட்ட தொடங்கி உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in