

உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உக்ரைன் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,312 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,78,000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் உக்ரைனில் கரோனாவுக்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்படவில்லை என்றும் வணிக்கத்தை தடுக்க விரும்பவில்லை என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவுக்கு 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.