அமெரிக்க மாகாணங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

அமெரிக்க மாகாணங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா
Updated on
1 min read

அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 10 மாகாணங்களில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க மருத்துவ நிபுணர் ஃபவுசி கூறும்போது, “அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 10 மாகாணங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் எண்ணிக்கை வரும் வாரங்களி்ல் இன்னும் கூடுதல் ஆகலாம். மிசோரி, ஒஹியோ ஆகிய மாகாணங்களில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் கூடும்போது தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் 70 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in