ஹாங்காங்கில் மெல்ல அதிகரிக்கும் கரோனா

ஹாங்காங்கில் மெல்ல அதிகரிக்கும் கரோனா
Updated on
1 min read

ஹாங்காங்கில் புதிதாக 80 பேருக்குக் கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''ஹாங்காங்கில் புதிதாக 80 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 75 பேருக்கு உள்ளூரிலேயே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஹாங்காங்கில் 3,600 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 40 பேர் பலியாகியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே ஹாங்காங்கில் இரட்டை இலக்க எண்களில் கரோனா பரவல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கரோனா பரவல் ஹாங்காங்கில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதால், அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in