

ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் நோய் தடுப்பு தரப்பில், “ ரஷ்யாவில்83 மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 5,871 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,06,720 ஆக அதிகரித்துள்ளது.
மாஸ்கோவில் மட்டும் நேற்று அதிகபட்சமாக 648 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவுக்கு இதுவரை 13, 192 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மொத்தமாக 1. 5 கோடி பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 93 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மீண்டுள்ள நிலையில், 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42, 48,492 ஆகவும்,இறப்பு எண்ணிக்கை 148,492 ஆகவும் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரையில் 20 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
4-வது இடத்தில் தற்போது ரஷ்யா உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது