பிரேசிலில் கரோனா தொற்று 16 லட்சத்தை கடந்தது:பலி எண்ணிக்கை 64,867 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கரோனா தொற்று 16 லட்சத்தை கடந்தது:பலி எண்ணிக்கை 64,867 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 26,051 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 26,051 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,03,005 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 602 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை பிரேசிலில் கரோனாவால் 64,867 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3 வது இடத்தில் இந்தியாவும், நான்காவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in