கரோனா வைரஸ்: பிரான்ஸில் பலி எண்ணிக்கை 10,328 ஆக அதிகரிப்பு

பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.
Updated on
1 min read

பிரான்ஸில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 10,328 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 1,417 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 10,328 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கரோனா வைரஸுக்கு இதுவரை 1,09,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30,000க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி 80 வயதான சீன சுற்றுலாப் பயணிக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளில் பிரான்ஸ் நான்காம் இடத்தில் உள்ளது. பிரான்ஸில் மார்ச் 17 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,096 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in