

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர்பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் புதிததாக 1,075 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 10,075க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்றார்.
ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை ஈரான் அரசு சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.
மேலும், ஈரானில் கோவிட் 19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களும் மூடப்பட்டுள்ளன.