சிரியாவில் ரஷ்யத் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலி

சிரியாவில் ரஷ்யத் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலி
Updated on
1 min read

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரியாவின் போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “சிரியாவின் இட்லிப் பகுதியில் உள்ள தெர்மனின் நகரைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் பொதுமக்கள் 3 பேர் பலியாயினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது” என்றார்.

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

தவறவீடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in