சிரியாவில் துருக்கி ராணுவம் தாக்குதல்: குழந்தைகள் 12 பேர் பலி

சிரியாவில் துருக்கி ராணுவம் தாக்குதல்: குழந்தைகள் 12 பேர் பலி
Updated on
1 min read

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் பலியாகினர். அதில் 12 பேர் குழந்தைகள்.

இதுகுறித்து உள்ளூர் தன்னார்வக் குழு கூறும்போது, “ சிரியாவின் வடமேற்குப் பகுதியில் குர்து படைகள் கட்டுப்பாட்டுப் பகுதியான தால் ரிபாத் நகரில், பள்ளிக்கு அருகே துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர். இதில் 12 பேர் குழந்தைகள்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், தாக்குதலில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் வீடியோ ஒன்றை ஒயிட் ஹெல்மட் தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது.


முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றனர். சிரியாவில் துருக்கிப் படையினர் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in