Published : 20 Sep 2019 10:31 AM
Last Updated : 20 Sep 2019 10:31 AM

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை: 5 பேர் படுகாயம்

வெள்ளை மாளிகை அருகே தாக்குதல் நடந்த இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்ட காட்சி

வாஷிங்டன்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

வாஷிங்டன் நகரின் வடபகுதியில் வெள்ளை மாளிகையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கொலம்பியா ஹைய்ட் எனும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் திடீரென ஒருவர் சாலையில் சென்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சாலையில் சென்றவர்களில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் தப்பி ஓடினார். போலீஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், " வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடப்பதாகத் தகவல் வந்தது. அங்கு வந்தபோது, 6 பேர் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 5 பேரையும் அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x