15 பேருக்கு மரண தண்டனை விதிக்க வட கொரிய அதிபர் உத்தரவு

15 பேருக்கு மரண தண்டனை விதிக்க வட கொரிய அதிபர் உத்தரவு
Updated on
1 min read

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், இந்த ஆண்டில் 15 மூத்த அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்ததகவலை நேற்று நடந்த தென்கொரிய நாடாளுமன்றத்தின் ரகசிய கூட்டத்தில் தென்கொரிய உளவு அமைப்பு வெளியிட்டது.

தனது அதிகாரத்துக்கு கட்டுப் படாமல் கேள்வி கேட்டதற்காக அந்த அதிகாரிகளுக்கு தண்டனை தரும் விதத்தில் இந்த நடவடிக் கையை அவர் மேற்கொண்டார் .

அரசின் ஒரு கொள்கை பற்றி புகார் சொன்னதற்காக வனத்துறை துணை அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

காரணம் கூறுவது, விவாதிப்பது என்பதெல்லாம் கிம் ஜோங்கிடம் எடுபடாது. ஏதாவது ஆட்சேபம் வந்தால் அதை தனது அதிகாரத் துக்குவிடப்பட்ட சவாலாக கருதி சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிடுவார் என்று நாடாளுமன்ற உளவுப்பிரிவு குழுவின் உறுப்பினர் ஷின் கியுங் மின் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in