

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் காரணமாக தெற்காசியாவில் நம்பிக்கையும், புத்துணர்வும் புதிய எழுச்சியும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் நிஷா தேசாய் ப்ஸ்வால் கூறும்போது, "இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மோடி தலைமையிலான புதிய ஆட்சியால் இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்காசிய நாடுகளில் புதிய நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக முறையிலான இந்தியாவில் பொறுப்பேற்றிருக்கும் அரசின் ஆட்சியால், இந்தியா அமெரிக்கா உடனான உறவு மற்ற நாடுகளை விட பலமடைந்துள்ளது.
அதேபோல, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய குடியரசு தின விழா வருகை இரு நாடுகளின் உறவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இருநாடுகளின் அளவிலும் பாதுகாப்பு, பொருளாதாரம், வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழல் போன்ற முயற்சிகளில் புதிய எழுச்சியை ஏற்பட்டுள்ளது" என்றார்.