Published : 31 Jan 2015 12:44 PM
Last Updated : 31 Jan 2015 12:44 PM
சீனாவின் யோங்கியாஒ மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் யோங்கியாஒ மாகாணத்தில் உள்ள சுஷோ நகரில் உள்ள தனியார் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை விபத்து நேரிட்டு மண்சரிவு ஏற்பட்டது.
விபத்தில் சுமார் 37 தொழிலாளர்கள் சிக்கினர். அதில் 7 பேர் தப்பித்து சுரங்கத்திலிருந்து வெளியேறினர். இந்த நிலையில் மீட்பு பணியின்போது 6 பேரது உடல்கள் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டன.
மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT