Last Updated : 06 Dec, 2014 05:34 PM

 

Published : 06 Dec 2014 05:34 PM
Last Updated : 06 Dec 2014 05:34 PM

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக புதிய ஹாரி பாட்டர் கதைகள்: ஜே.கே.ரவுலிங் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, புதிய ஹாரி பாட்டர் கதைகள் வெளியிடப்படும் என்று, எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் கூறியுள்ளார்.

1997-ஆம் ஆண்டு ஹாரி பாட்டர் முதல் புத்தகம் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது. ஹாரி பாட்டரின் நாவலாசிரியர் ஜே.கே ரவுலிங்கும் உலகப் புகழடைந்தார். மேலும் 6 பாகங்கள் 2007-ஆம் ஆண்டு வரை வெளியாகி தொடர்ந்து விற்பனையில் புதிய சாதனைகளைப் படைத்தது. புத்தகங்களோடு மட்டுமல்லாமல், ஹாரி பாட்டர் திரைப்படங்கள், வீடியோ கேம், பொம்மைகள், தீம் பார்க் என ஹாரி பாட்டருக்கென தனி உலகம் உருவானது.

ஹாரிபாட்டரின் கடைசி பாகம் 2007-ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து அந்த பாத்திரத்தை வைத்து வேறு எந்த கதைகளும் எழுதப்படவில்லை. தற்போது, டிசம்பர் 12-ஆம் தேதி முதல், 23-ஆம் தேதி இடையிலான 12 நாட்கள் இடைவெளியில், தினம் ஒரு ஹாரி பாட்டர் சிறுகதை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை ஆச்சரியத்தின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது என்று ஜே.கே. ரவுலிங் தெரிவித்துள்ளார்.

மேலும் #PottermoreChristmas என்ற ஹாஷ் டேக்கை ட்விட்டரில் உருவாக்கி, பாட்டர் ரசிகர்கள் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x