தமிழர்களுடன் ஐ.நா. தூதர் சந்திப்பு

தமிழர்களுடன் ஐ.நா. தூதர் சந்திப்பு
Updated on
1 min read

இலங்கை உள்நாட்டுப் போரின் போது பயங்கரவாத தடைச் சட்டத் தின்கீழ் ஏராளமான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு தூதர் பென் எமர்ஸன் நேற்று முன்தினம் அனுராதபுரம் சிறைக்கு நேரில் சென்றார். அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துப் பேசினார். பயங்கரவாத தடைச் சட்டம் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதித்திருக்கிறதா என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும் விடுதலை செய்யப்பட்ட தமிழர்கள் சிலரையும் அவர் சந்தித்துப் பேசினார். சிறை வாழ்க்கைக்குப் பிறகு அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in