கிர்கிஸ்தானில் சீன தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: அதிகாரிகள் மூவர் காயம்

கிர்கிஸ்தானில் சீன தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: அதிகாரிகள் மூவர் காயம்
Updated on
1 min read

கிர்கிஸ்தானில் சீன தூதரகம் அருகே நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

குண்டு வெடிப்பு தொடர்பாக கிர்கிஸ்தானின் துணை பிரதமர் செனிஷ் ரசாகோவ், "கிர்கிஸ்தானில் சீன தூதரகத்தின் நுழைவாயிலின் அருகே கார்குண்டு செவ்வாய்கிழமை வெடித்ததில் காரை ஓட்டி வந்த தீவிரவாதி பலியானார்.

மேலும் தூதரகத்திலிருந்த 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகேவுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது"என்றார்.

இந்த நிலையில் கிர்கிஸ்தானில் சீன தூதரகத்தில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு சீனா வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in