அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி
Updated on
1 min read

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து சான் பிரான்சிஸ்கோ நகர போலீஸார் தரப்பில், "சான் பிரான்சிஸ்கோவிலுள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகத்தின் பணியாளர் ஒருவர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் பற்றிய விவரத்தை தற்போது கூற முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in