தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளது: ஷேக் ஹசினா

தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளது: ஷேக் ஹசினா
Updated on
1 min read

வங்கதேச பொதுத்தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்து முடிந்ததாகவும் நான்காவது முறையாக அந்நாட்டின்  பிரதமராக பதவியேற்கவுள்ள ஷேக்  ஹசினா தெரிவித்துள்ளார்.

வங்க தேசத்தில் மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டு உடனடியாக வாக்குப்பதிவு தொடங்கியது.இதில் வாக்குப்பதிவு நடந்தபோது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியாகினர்.

பொதுத்தேர்தலில் 288 தொகுதிகளில் ஹேக் ஹசினாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் வெறும் 6 இடங்களையே கைப்பற்றின.

இந்த வெற்றி மூலம் ஷேக் ஹசினா நான்காவது முறையாக வங்கதேச பிரதமராக வரலாற்று சாதனை படைத்தார். இந்த நிலையில் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் மீண்டும் முறையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இதற்கு ஷேக் ஹசினா பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “ இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்ததுள்ளது. என்னுடைய கட்சி அனைவருக்காகவும் உழைத்தது. எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு அவர்களே காரணம். அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சரியாக ஈடுபடவில்லை” என்றார்.

பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி ஷேக்ஹசினாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் மோடி, ”வங்கதேசத் தேர்தலில் வெற்றி பெற்ற ஹேக் ஹசினாவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in