சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர்.

விபத்தில் சிக்கிய அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர்.

Updated on
1 min read

ராஸ் தனுரா: சவுதி அரேபி​யா​வின் அராம்கோ நிறு​வனத்​துக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டர் நேற்று விபத்​தில் சிக்​கியது. இதில் 14 பேர் உயி​ரிழந்​தனர்.

உலகிலேயே கச்சா எண்​ணெய் அதி​கம் ஏற்​றுமதி செய்​யும் நாடு சவுதி அரேபி​யா. இங்கு கச்சா எண்​ணெய்யை சுத்​தி​கரித்து ஏற்​றுமதி செய்​வ​தில் சவுதி அரசின் அராம்கோ நிறு​வனம் ஈடு​பட்டு வரு​கிறது. இதன் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள், ஹார்​முஸ் ஜல சந்​தி​யின் மேற்கு கடலோர பகு​தி​யான ராஸ் தனுரா என்ற பகு​தி​யில் அமைந்​துள்​ளன. ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்​கிய​தால், அராம்கோ எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் கடந்த 4 மாதங்​களாக எந்த பணி​யும் நடை​பெறாமல் இருந்​தது. இதனால் பெட்​ரோலியப் பொருட்​கள், எரி​வாயு உற்​பத்தி மற்​றும் ஏற்​றும​தி​கள் முற்​றி​லும் தடைபட்ட நிலை​யில் இருந்​தன.

இந்​நிலை​யில் ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானதை அடுத்து, ஹார்​முஸ் ஜல சந்​தி​யில் கடந்த சில நாட்​களாக கப்​பல் போக்​கு​வரத்து தொடங்​கியது. இதனால் அராம்கோ நிறு​வனத்​தின் எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் மீண்​டும் பணி​கள் தொடங்​கின.

இங்கு பணி​யாற்​றும் அராம்கோ நிறு​வனத்​தின் அதி​காரி​கள், பொறி​யாளர்​கள், தங்​கள் நிறு​வனத்​துக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டரில் பயணம் செய்​வது வழக்​கம். இங்கு பணி​கள் மீண்​டும் தொடங்​கப்​பட்​டதை அடுத்து, நிறு​வனத்​தின் ஹெலி​காப்​டரில் 14 ஊழியர்​கள் பயணம் செய்​தனர்.

எதிர்பாராதவிதமாக ஹெலி​காப்​டர் நேற்று காலை விபத்​தில் சிக்​கியது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரும் உயி​ரிழந்​தனர். இந்த சோக சம்​பவம் குறித்து சவுதி அரேபிய அரசு விடுத்​துள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: சவுதி அராம்கோ நிறு​வனத்​தின் ஹெலி​காப்​டர் ராஸ் தனு​ரா​வில் நேற்று காலை 6 மணி​ அள​வில் விபத்​தில் சிக்​கியதை அறி​விப்​ப​தில் எரிசக்தி துறை அமைச்​சகம் வருந்​துகிறது.

இந்த விபத்​தில் ஹெலி​காப்​டரில் பயணம் செய்த சவுதி அரேபியர்​கள் 14 பேரும் உயிரிழந்தனர். ஹெலி​காப்​டர் விபத்​துக்​கான காரணம் தெரிய​வில்​லை. இதுகுறித்து சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இவ்​வாறு சவுதி அரேபிய அரசு தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>விபத்தில் சிக்கிய அராம்கோ நிறுவன ஹெலிகாப்டர்.</p></div>
50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in