Published : 04 Jul 2025 08:18 AM
Last Updated : 04 Jul 2025 08:18 AM
புதுடெல்லி: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஹெக்செத் மற்றும் ராஜ்நாத் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுக்கான அமெரிக்க - இந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் இருவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். இவ்வாண்டு நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க பாதுகாப்பு தளவாட விற்பனை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பாதுகாப்பு மற்றும் தொழில் துறை ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர். அமெரிக்காவை பொருத்தவரையில் தெற்காசியாவில் முக்கிய நெருங்கிய கூட்டாளியாக இந்தியா உள்ளது என்பதை ஹெக்செத் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT