கராச்சி யுஎஸ் தூதரகம் முன் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்

கராச்சி யுஎஸ் தூதரகம் முன் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்
Updated on
1 min read

கராச்சி: ஈ​ரான் உச்ச தலை​வர் காமேனி கொல்​லப்​பட்​டதைக் கண்​டித்து பாகிஸ்​தான் கராச்சியில் ஷியா அமைப்​பினர் ஞாயிற்​றுக்​கிழமை பிரம்​மாண்ட போராட்​டம் நடத்தினர்.

கராச்சியின் சுல்​தா​னா​பாத் பகு​தியி​லிருந்து மாய் கோலாச்சி நோக்​கிச் சென்ற பேரணி​யில் ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர். அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலுக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பிய​வாறு அமெரிக்க தூதரகத்தை நெருங்​கினர்.

நிலை​மை​யைக் கட்​டுப்​படுத்த பாகிஸ்​தான் போலீ​ஸார் கண்​ணீர்ப்​பு​கைக் குண்​டு​களை வீசினர். எனினும், தடைகளைத் தாண்டி அமெரிக்க தூதரக வளாகத்​தின் முக்​கியப் பகு​திக்​குள் போராட்​டக்​காரர்​கள் நுழைய முயன்​ற​போது, அங்​கிருந்த அமெரிக்க வீரர்​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர்.

இதில் 12 பேர் உயி​ரிழந்​தனர், 30-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்​தனர். இதையடுத்து பாகிஸ்​தானில் ஷியா பிரி​வினர் அதி​கம் வாழும் பகு​தி​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அமெரிக்க தூதரகங்களில் துணை ராணுவப் படை​யினர்​ குவிக்​கப்​பட்​டுள்ளனர்​.

கராச்சி யுஎஸ் தூதரகம் முன் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்
நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in