டிச.23: இன்று என்ன? - பிரதமர் சரண் சிங்

டிச.23: இன்று என்ன? - பிரதமர் சரண் சிங்
Updated on
1 min read

நாட்டின் ஏழாவது பிரதமர், உத்தரப்பிரதேசம் மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் கிராமத்தில் 1902 டிசம்பர் 23-ல் பிறந்தவர் சௌத்ரி சரண் சிங். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1926-ல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.

1928-ல் சிவில் வழக்கறிஞரானார். விடுதலை போராட்டத்தில் தன்னை பிணைத்துக் கொண்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார். 1930-ல் உப்பு சட்டங்களை மீறியதற்காக 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1967-ல்முதன்முறையாக உத்தரப்பிரதேச முதல்வரானார். 1979-ல்இந்தியாவின் பிரதமர் ஆனார்.

அவரது நினைவைப் போற்றும் விதமாக லக்னோவில் உள்ள அமௌசி விமான நிலையத்திற்கு சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம், மீரட் பல்கலைக்கழகத்திற்கு சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in