Published : 23 Nov 2022 06:01 AM
Last Updated : 23 Nov 2022 06:01 AM

நவ.23: இன்று என்ன? - உவமை கவிஞர் சுரதா

கவிஞர் திலகம், தன்மானக் கவிஞர், கலைமாமணி, கவிமன்னர் என அழைக்கப்படுபவர் ராசகோபாலன். இவர் தஞ்சை மாவட்டம், பழையனூரில் 1921-ல் நவம்பர் 23-ம் தேதி பிறந்தார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்களை கற்று தேர்ந்தார். பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் தன் பெயரை சுப்புரத்தினதாசன் ஆக மாற்றினார். சுப்புரத்தினதாசனை சுருக்கி சுரதா என மாற்றிக் கொண்டார்.

1944-ல் மங்கையர்கரசி திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இவரது ‘தேன்மழை’ கவிதை நூலுக்கு தமிழக அரசு 1969-ல் விருது வழங்கியது. 1972-ல் கலைமாமணி விருது பெற்றார். திருச்சி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. “இரட்டை கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்ற இவரது கவிதை வரிகள் மிகவும் புகழ்பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x