Published : 22 Aug 2022 06:01 AM
Last Updated : 22 Aug 2022 06:01 AM

ஆக.22: இன்று என்ன? - வாரன் ஹேஸ்டிங்ஸ் நினைவு தினம்

இங்கிலாந்தில் 1732 டிசம்பர் 6-ம் தேதி பிறந்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். சிறந்த அரசியல் அறிஞர். இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது 1772 முதல் 1785 வரை வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக பணியாற்றியவர்.

ராபர்ட் கிளைவ் கொண்டுவந்த இரட்டை ஆட்சிமுறையை ஒழித்தவர். முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக 1781-ல் கல்கத்தாவில் மதரஸா கல்வி நிறுவனத்தை தொடங்கினார்.

இவரது ஆட்சிக் காலத்தில், 1774-ல், கல்கத்தாவில் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வருவாய்த்துறையை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1818-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி தனது 85-வது வயதில் மரணம் அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x