Published : 29 Jul 2022 06:00 AM
Last Updated : 29 Jul 2022 06:00 AM

ஜூலை 29: இன்று என்ன? - சர்வதேச புலிகள் தினம்

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலி நம் நாட்டின் தேசிய வனவிலங்கு ஆகும். உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வந்ததை தொடர்ந்து, புலிகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

புலிகளை பாதுகாப்பதன் மூலம் வனவளத்தை பாதுகாக்க முடியும். அது பல்லுயிர் பெருக்கத்துக்குப் பெரிதும் உதவும். 5 ஆண்டுகளுக்கு முன்பு அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை அண்மையில் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x