Last Updated : 11 Dec, 2023 04:25 AM

 

Published : 11 Dec 2023 04:25 AM
Last Updated : 11 Dec 2023 04:25 AM

ப்ரீமியம்
திறன் 365 - 23: பொறுமை தருமே அழகான கையெழுத்து

பலரும் தங்களுடைய கையெழுத்து கோழி கிறுக்கியது போல உள்ளது என்று கவலைப்படுகின்றனர். ஆசிரியர்கள் குழந்தைகளின் கையெழுத்தை நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆரம்ப நிலை வகுப்புகளில்கூட கையெழுத்துக்கென்று தனிப் பாடவேளை இல்லை. கரும்பலகையில் எழுதியுள்ளதையே குழந்தைகள் எழுதுகின்றனர். அதுவும் குறிப்பிட்ட காலக்கெடு விதிக்கப்படுகிறது. வேகமும், வலியும் விரல்களைக் கோழிகளாக மாற்றிவிடுகின்றன. உண்மையில், அழகான கையெழுத்து பெறுவதற்கு பொறுமையும் முறையான பயிற்சியும் தேவை.

முதல் வகுப்பில் இருந்து இந்த பயிற்சியை ஆரம்பித்துவிட வேண்டும். வடிவு ஒற்றி எழுத பழக்க வேண்டும். இதனால், குழந்தைகள் எழுத்துக்களை அறிந்து கொள்வதுடன், எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள். பயிற்சி தாள்களை இதற்கு பயன்படுத்தலாம். எழுத வைப்பதைவிட முக்கியமானது, பென்சில், பேனாவை எப்படி பிடித்து எழுதவேண்டும் என்பது, பென்சில், பேனாவை தளர்வான பிடியுடன் சரியாக குழந்தை பிடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அழகான கையெழுத்தை ஊக்குவிக்க எழுதுவதற்கு தோதான நிலையில் வசதியாக அமர செய்து பழக்கப்படுத்த வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x