

தேசிய தடகளப் போட்டியில், நீளம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற கோவை பள்ளி மாணவிக்கு, மாநகராட்சி ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
அகில இந்திய தடகள சங்கம், ஆந்திரா மாநில தடகள சங்கம் ஆகியவை இணைந்து, ஆந்திரா மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் தேசியஅளவிலான தடகளப் போட்டியை நடத்தியது.
இதில், 14 வயதுக்கு உட்டோருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் மாநகராட்சி பள்ளிமாணவி நிவேதிதா கலந்து கொண்டார். 5.33 மீட்டர் நீளம் தாண்டி, 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் படித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதைத் தொடர்ந்து, மாணவி நிவேதிதா, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தை சந்தித்து தங்கப் பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஞானஸ்கந்தனின் மகளான நிவேதிதா ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.