Published : 24 Aug 2022 08:17 AM
Last Updated : 24 Aug 2022 08:17 AM

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் - 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா

டோக்கியோ

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாய்னா நெவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால், ஹாங்காங்கின் செயுங் கன்யி-யை எதிர்த்து விளையாடினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் வெற்றிபெற்றார்.

சாய்னா நெவால், 2-வது சுற்றில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் அவர், போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் சாய்னா நேரடியாக 3-வது சுற்றில் கால்பதித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் புல்லேலா காயத்ரி ஜோடி 21-11, 21-13 என்ற நேர்செட்டில் மலேசியாவின் லோ யீன்யுவான், வலேரிசியோவ் ஜோடியை தோற்கடித்தது. இதே போன்று மற்றொரு இந்திய ஜோடியான அஷ்வினி பாத், ஷிகா கவுதம் ஜோடி 21-8, 21-14 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஜூடித், மார்ட்டினா கிராசினி ஜோடியை வீழ்த்தியது.

கலப்பு இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் இஷான் பத்னாகர், தனிஷா கிரஷ்டோ ஜோடி 14-21, 17-21 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் சுபக் ஜோம்கோ, சுபிஸ்ஸரா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத் கராகா, விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சலா ஜோடி 14-21, 18-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் வில்லியம் வில்லேஜர், ஃபேபியன் டெல்ரூ ஜோடியிடம் வீழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x