மாவட்ட வளர்ச்சிக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்த 3-ம் வகுப்பு மாணவன்

மாவட்ட வளர்ச்சிக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்த 3-ம் வகுப்பு மாணவன்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்காகத் தான் சேமித்து வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாயை, 3-ம் வகுப்பு மாணவன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகர். மளிகைக் கடை நடத்தி வரும் இவரின் மகன் ஹேம கார்த்திக் (8). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது உண்டியல் சேமிப்பு நிதி ரூ.20,000 மற்றும் பெற்றோர் வழங்கிய தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் 25 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

சிறுவன் ஹேம கார்த்திக், தன்னுடைய மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டியிடம் காசோலையாக வழங்கினார்.

நிதியைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி, மாணவன் ஹேமகார்த்திக்குப் பாராட்டு தெரிவித்தார். மேலும் ஆங்கில அகராதி, இயர் புக் உள்ளிட்ட புத்தகங்களையும் சிறுவனுக்குப் பரிசாக வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in