

இசை: Main clause ஆனது Future tense இல் வந்தால், first conditional statement-ன்னு சொன்னீங்களே பாட்டி.
மித்ரன்: அதை கொஞ்சம் விளக்கி சொல்லுங்க.
பாட்டி: சொல்லுறேன். எல்லாரும் தண்ணீர் குடிச்சிக் கோங்க.
இனியன்: எனக்கு வேண்டாம் பாட்டி. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் குடிச்சேன்.
பாட்டி: பரவாயில்லை இனியன். இந்த தண்ணீரை குடி.
இனியன்: இல்லை பாட்டி. என்னால் இப்போது குடிக்க முடியாது.
பாட்டி: கொஞ்சமாவது குடியேன்.
இனியன்: வேண்டாம் பாட்டி. எனக்கு தாகம் எடுத்தால், நான் தண்ணீர் குடிப்பேன். இப்போது வேண்டாம்.
பாட்டி: நீ என்ன சொன்னாய். திருப்பி சொல்லு.
இனியன்: எனக்கு தாகம் எடுத்தால், நான் தண்ணீர் குடிப்பேன்.
பாட்டி: இப்போ நீ சொன்ன வாக்கியம் தான் First Conditional Statement.
இசை: If I feel thirsty, I will drink water.
பாட்டி: ஒரு செயலின் மூலம் கிடைக்கும் விளைவு, உண்மையானதாக இருக்கும் வேளையில் First Conditional Statement -ஐ நாம் பயன்படுத்தலாம்.
உமையாள்: தாகம் எடுத்தால், தண்ணீர் குடிப்பேன் என்பது உண்மையே.
மித்ரன்: இது நடப்பதற்கு சாத்தியம் (வாய்ப்பு)இருக்கிறது.
பாட்டி: இங்கு main clause ஆனது Future tense இல் இருக்கும்.(I will drink water)
பாட்டி: Conditional clause வழக்கம் போல் present tense இல் இருக்கும்.