கோவையில் செம்மொழிப் பூங்கா பொது மக்கள் பார்வைக்கு திறப்பு!

படம்: ஜெ.மனோகரன்

படம்: ஜெ.மனோகரன்

Updated on
1 min read

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் திறக்கப்பட்டது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

முதல் நாளில் பொது மக்கள் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். பள்ளிக் குழந்தைகள் குழுவாக அழைத்து வரப்பட்டனர். நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மிகவும் சிறப்பாக உள்ளது என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

பூங்காவில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரி கமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் 38.69 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10-வயதிற்குட்பட்டோர்) ரூ.5, நடைபயிற்சி செய்வோருக்கு ஒரு நபருக்கு (மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு (நாளொன்றுக்கு) ரூ.25,000, குறும்பட ஒளிப்பதிவிற்கு மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு ரூ.2000 என கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

<div class="paragraphs"><p>படம்: ஜெ.மனோகரன்</p></div>
‘பி.ஆர்.பாண்டியனை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை’ - அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in