ஊட்டி 128-வது மலர் கண்காட்சிக்காக 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக மலர் செடிகள் நடவு பணியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக மலர் செடிகள் நடவு பணியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.

Updated on
1 min read

ஊட்டி: ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் நடை​பெற உள்ள 128-வது மலர் கண்​காட்​சிக்​காக 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

நீல​கிரி மாவட்​டம் ஊட்​டி, அரசு தாவர​வியல் பூங்​கா​வில் வரும் மே மாதம் நடை​பெற இருக்​கும் 128-வது மலர்​ கண்​காட்​சி​யை முன்​னிட்​டு பூங்​கா​வின்​ பல்​வேறு பகு​தி​களில்​ மலர்​ பாத்​திகள்​ அமைத்​து, பல வண்ண மலர்ச்​ செடிகள்​ நடவு செய்யப்​படு​கின்​றன.

இன்கா மேரி​கொல்​டு, பிரன்ச்​ மேரி​கோல்​டு, லில்​லி​யம்​ஸ்​, டேலி​யா போன்​ற மலர்​ நாற்​றுகள்​ நடும்​ பணி​யை தோட்​டக்​​கலைத் ​துறை இணை இயக்​குநர் நவநீதா முன்​னிலை​யில், நீல​கிரி மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா நேற்று தொடங்கி வைத்​தார்.

கடந்த ஆண்டு 2025-ல் 7.5 லட்​சம் மலர் செடிகள் நடவு செய்​யப்​பட்​டன. இவ்​வாண்டு சிறப்பு அம்​ச​மாக பொது​மக்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் ஜெரேனி​யம், சைக்​லமன், பால்​சம் மற்​றும் பல புதிய ரக ஆர்​னமெண்​டல் கேல், ஓரியண்​டல் லில்​லி, ஆசி​யாடிக் லில்​லி, டேலியா மற்​றும் பிகோனி​யா, கேன்​டீடப்ட், பிரன்ச் மேரி​கோல்​டு, பேன்​சி, பெட்​டுனி​யா, பிளாக்​ஸ், ஜினி​யா, ஸ்டாக், வெர்​பி​னா, சன்​பிளவர், சிலோ​சி​யா, ஆன்​டிரைனம், டயான்​தஸ், ஆஸ்​டர், ஜெர்​ப​ரா, க்ரை​சாந்​தி​மம், டெல்​பினி​யம், சால்​வி​யா, ஆந்​தூரி​யம் போன்ற 275 வகை​யான விதைகள் மற்​றும் செடிகள் உள்ளன.

ஜப்​பான், அமெரிக்​கா, ஜெர்​மனி, நெதர்​லாந்து ஆகிய நாடு​களில் இருந்​தும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும் பெறப்​பட்டு மலர் செடிகள் உற்​பத்தி செய்​யப்​பட்டு பூங்​கா​வில் பல்​வேறு பகு​தி​களில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

நடவு செய்​யப்​படும் மலர் நாற்​றுகளுக்கு பனி​யின் தாக்​கம் ஏற்​ப​டாத வண்​ணம் கோத்​தகிரி மிலார் செடிகளை கொண்டு பாது​காப்பு செய்​யப்​படும். மேலும், எதிர்​வரும் மலர் கண்​காட்​சி​யையொட்டி மலர்க்​காட்சி மாடம் மற்​றும் கண்​ணாடி மாளி​கை​யில் 50,000 வண்ண மலர்த் தொட்​டிச் செடிகள் வைக்கப்படும்.

இந்த ஆண்டு 25 லட்​சம் சுற்​றுலா பயணி​கள் வருகை தரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​நிகழ்​வில், துணை இயக்​குநர் (பொ) பபீ​தா, உதவி இயக்​குநர் ஜெயந்​தி, பைசல், தோட்​டக்​கலை துறை அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

<div class="paragraphs"><p>ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக மலர் செடிகள் நடவு பணியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.</p></div>
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அரிவாளை வீசிய இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in