

கோப்புப் படம்
சென்னை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில், ஆன்மீக சுற்றுலா, கல்வி சுற்றுலா, கோடைகால சுற்றுலா உள்பட பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், காசி தீர்த்த யாத்ரா என்ற பெயரில் பாரத் கவுர சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து செப்.9-ம் தேதி புறப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை வழியாக கயா, காசி (வாரணாசி), பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இந்த ரயில் செப்.17-ம் தேதி திருநெல்வேலியை மீண்டும் அடைகிறது. இந்த ரயிலில் ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 7 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 3 தூங்கும் வசதிகொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளத்தில் அறியலாம். இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.