

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள அரிய வகை பச்சை ரோஜாக்கள்.
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை பச்சை ரோஜா சீசன் தொடங்கியுள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்கா அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகளுக்குப் பெயர் பெற்றதாகும். பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய தாவர இனங்களுடன் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிம்ஸ் பூங்காவில் தற்போது அரிய வகைபச்சை ரோஜாக்களின் சீசன் தொடங்கியுள்ளது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ள இந்த ரோஜா செடிகள் பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பச்சை ரோஜா மலர்கள் பூக்கத் தொடங்கிஉள்ளதால், அவற்றை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக விரைவில் காட்சிப்படுத்த பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுஉள்ளது. அரிய வகை பச்சை ரோஜாக்களை காண சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.