Published : 29 May 2023 09:59 AM
Last Updated : 29 May 2023 09:59 AM

கொடைக்கானல் மலர் கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

கொடைக்கானல் மலர் கண்காட்சி

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதைத் தொடர்ந்து நாளை வரை மலர் கண்காட்சி நீட்டிக் கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 26-ம் தேதி கோடை விழாவின் தொடக்கமாக மலர் கண்காட்சி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைய வேண்டிய நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், மலர் கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாளை (மே 30) வரை மலர் கண்காட்சி நடை பெறும் என, தோட்டக்கலைத் துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் 2 நாட்கள் மட்டுமே நடந்த மலர் கண்காட்சி, பின்னர் 3 நாட்கள் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு முதன்முறையாக, கொடைக்கானல் மலர் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுவது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x