Published : 23 Apr 2023 04:20 AM
Last Updated : 23 Apr 2023 04:20 AM

கர்நாடகாவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு ஆண் சிங்கம் வருகை

கர்நாடக மாநிலத்திலிருந்து வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஆண் சிங்கம்.

சென்னை: வண்டலூர் பூங்காவில் 180 வகையான இனங்களை சார்ந்த 2,500வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு இடமாகவும் இது திகழ்கிறது.

தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் கரோனா பரவலுக்கு முன்பு 11 சிங்கங்கள் இருந்தன. கரோனா பரவல் காலத்தில் பூங்கா மூடப்பட்டபோது, கரோனா தொற்றால் 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதனால், வண்டலூர் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்தது.

ஏற்கெனவே ஒரு சிங்கம், லக்னோவில் உள்ள பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விலங்குகள் பரிமாற்ற முறையில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து ஆண் சிங்கம் ஒன்று வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது 3 வார தனிமைப்படுத்தலுக்கு பிறகு தற்போது பொதுமக்கள் பார்வையிட திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த விலங்குக்கு மாற்றாக, வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளை புலி ஒன்று பன்னர்கட்டா பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x