உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளில் மாமல்லபுரம் கலைச் சின்னங்களைக் காண இலவச அனுமதி

மாமல்லபுரம் | கோப்புப் படம்
மாமல்லபுரம் | கோப்புப் படம்
Updated on
1 min read

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களை நாளை (19-ம் தேதி) சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ம் முதல் 25-ம் வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான நாளை (நவ.19) செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட குடவரை சிற்ப வளாகங்களில், சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in