

இன்றைய வாழ்க்கை முறையில் சமூக ஊடகங்களும் ஓர் அங்கமாகிவிட்டன. குறிப்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஃபேஸ்புக்கில் வலம்வரும் தேவையற்ற காணொளிகள் பயன்படுத்துவோருக்குக் கவனச்சிதறல், எரிச்சல், அசௌகரியம் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனாலேயே ஃபேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துகொள்வோரும் உண்டு.
இசூட் (ESUIT) - பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள், தொலை தூரத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பு வைத்திருக்க, அவர்களுடன் உரையாட, விவாதங்கள் செய்ய, சுவாரசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஃபேஸ்புக் தளம் இருந்தது. ஆனால், கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஃபேஸ்புக்கை ரீல்ஸ்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.