பெங்களூருவில் ஜூன் 7-ம் தேதி உலக திருக்குறள் மாநாடு: திருவள்ளுவர் சங்க தலைவர் குமார் தகவல்

மதுரையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழ் அறிஞர்கள்.

மதுரையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழ் அறிஞர்கள்.

Updated on
1 min read

நாகர்கோவில்: திரு​வள்​ளுவர் அறக்​கட்​டளை சார்​பில் ஆண்​டு​தோறும் வைகாசி 1-ம் தேதி, மதுரை​யில் திருக்​குறள் அரங்​கேற்​றப்​பட்ட நாளை நினை​வுகூரும் வகை​யில், கன்​னியாகுமரி கடல் நடு​வில் அமைந்துள்ள 133 அடி உயர திரு​வள்​ளுவர் சிலைக்கு மரி​யாதை செலுத்​தப்​படு​கிறது.

இதை முன்​னிட்​டு, நேற்று முன்​தினம் கன்​னி​யாகுமரி அருகே லீபுரத்​தில் திருக்​குறள் விழா நடைபெற்​றது. சிறு​வர், சிறுமிகளுக்​கான திருக்​குறள் ஒப்​பு​வித்தல் போட்டி நடை​பெற்​றது.தொடர்ந்​து, நேற்று காலை தமிழறிஞர்​கள் தனிப்​படகில் சென்​று, திரு​வள்​ளுவர் சிலை​யின்பாதத்​தில் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர். குறளகம் நிறு​வனர் தமிழ்​குழவி தலைமை வகித்​தார். உலகப் பொது​மறை திருக்​குறள் பேரவை நிர்​வாகி திரு​வள்​ளுவன் முன்​னிலை வகித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற, பெங்​களூரு தாய்​மொழி கூட்​டமைப்பு தலை​வர் குமார், செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: உலக தமிழர்​களை ஒன்​றிணைக்​கும் வகை​யில் பல்​வேறு இடங்​களில் திருக்​குறள் நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டுள்​ளன.

முதலா​வது திருக்​குறள் மாநாடு கன்​னி​யாகுமரி​யில் நடந்​தது. 2-வது மாநாடு இங்​கிலாந்​து, 3-வது மாநாடு ஆஸ்​திரேலி​யா, 4-வதுமாநாடு டெல்லி மற்​றும் மைசூரு, 5-வது மாநாடு அமெரிக்​கா, 6-வது மாநாடு கம்​போடி​யா​வில்நடந்​தது. 7-வது மாநாடு பெங்​களூரு​வில் நடை​பெறவுள்ளது. அரசி​யல் சார்​பற்ற அமைப்​பாக, 65 ஆண்​டு​களாக திரு​வள்​ளுவர் சங்​கம் கர்​நாட​கா​வில் இயங்கி வரு​கிறது.

தற்​போது, தமிழகத்​தில் இருக்​கும் பல்​வேறு திருக்​குறள் அமைப்​பு​களை ஒன்​றிணைத்து மாநாடு நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இந்த மாநாட்​டில் வெளி​நாடு​களைச் சேர்ந்த திருக்​குறள் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், பேராசிரியர்​கள், மாணவர்​கள் கலந்து கொள்​கின்​றனர். திருக்​குறள் ஆய்வு கட்​டுரைகள் மாநாட்​டில் சமர்ப்​பிக்​கப்​பட​வுள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தா​ர்.

<div class="paragraphs"><p>மதுரையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழ் அறிஞர்கள்.</p></div>
நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in