திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல அனுமதிக்கக் கோரி 2-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்த போலீஸார். | படங்கள்: நா.தங்கரத்தினம் |

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல அனுமதிக்கக் கோரி 2-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்த போலீஸார். | படங்கள்: நா.தங்கரத்தினம் |

திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு கொடியேற்றம்: 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் கைது

Published on

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் மலை​யில் நேற்று சந்தனக்கூடு விழா கொடியேற்​றம் நடை​பெற்​றது. இதையொட்​டி, தங்​களை​யும் மலைக்​குச் செல்ல அனு​ம​திக்​கக் கோரி 2-வது நாளாக நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்ட பெண்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

திருப்​பரங்​குன்​றம் மலை மீதுள்ள சிக்​கந்​தர் பாதுஷா தர்​கா​வில் சந்தனக்கூடு திரு​விழாவை நடத்​து​வது தொடர்​பாக நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில், விதி​முறை​களைப் பின்​பற்றி விழா நடத்த அறி​வுறுத்​தப்​பட்​டது.

இதையடுத்​து, நேற்று முன்​தினம் மலை​யில் உள்ள தர்கா​வுக்​குச் சென்​று, விழாவுக்​கான முன்​னேற்​பாடு​களை தர்கா நிர்​வாகி​கள் மேற்​கொண்​டனர். அப்​போது, அடி​வாரத்​தில் உள்ள கோட்​டைத் தெரு பெண்​கள், தங்​களை​யும் மலைக்​குச் செல்ல அனு​ம​திக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி ஆர்ப்​பாட்​டம் செய்​தனர். இது தொடர்​பாக 12 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

பின்​னர், மலைக்​குச் செல்​லும் பழனி ஆண்​ட​வர் கோயில் பாதை, கிரிவலச் சாலை​யில் உள்ள படிக்​கட்டு பாதை​யில் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர். இதனிடையே, கோட்​டைத் தெரு​வைச் சேர்ந்த பெண்​கள் உட்பட 20-க்​கும் மேற்​பட்​டோர் தீபச் சட்​டிகளை ஏந்​தி​யபடி, பழனி ஆண்​ட​வர் கோயில் அடி​வாரப்​பாதை நுழைவுப் பகு​தி​யில் 2-வது நாளாக நேற்று திரண்​டனர்.

<div class="paragraphs"><p>மதுரை திருநகரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினர்.</p></div>

மதுரை திருநகரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினர்.

தர்கா நிர்​வாகி​களை மலைக்​குச் செல்ல அனு​ம​தித்​தால், தங்​களை​யும் அனு​ம​திக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி போலீ​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். அதற்கு போலீ​ஸார் அனு​மதி மறுத்​த​தால், பெண்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதையடுத்து அவர்​களைக் கைது செய்த போலீ​ஸார், திருநகரில் உள்ள திருமண மண்​டபத்​தில் அடைத்தனர்.

அவர்​களை பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “கைது செய்​யப்​பட்​ட​வர்​களை நிபந்​தனை​யின்றி விடுவிக்க வேண்​டும். முரு​க​னின் தல விருட்​ச​மான கல்​லத்தி மரத்​தில் தர்கா நிர்​வாகம் கொடி ஏற்​றி​யுள்​ளது.

அதை உடனடி​யாக அகற்ற வேண்​டும். சிக்​கந்​தர் பாதுஷாவுக்கு கோரிப்​பாளை​யம் தர்காவில் கல்​லறை உள்​ள​தாக சுற்​றுலாத் துறை தெரி​வித்​துள்​ளது. ஒரு​வருக்கு எப்​படி 2 இடங்களில் கல்​லறை இருக்க முடி​யும்.

இதுகுறித்து தொல்​லியல் துறை ஆய்வு நடத்த வேண்​டும்” என்​றார். இதற்​கிடை​யில், கைது செய்​யப்​பட்​ட​வர்​களை விடுவிக்க வலி​யுறுத்​தி, பாஜக மாவட்​டத் தலை​வர் மாரி சக்​ர​வர்த்தி தலை​மை​யில் பாஜக மற்​றும் இந்து முன்​னணி​யினர் உள்​ளிட்​டோர் திருநகர் 2-வது பேருந்து நிறுத்​தப் பகு​தி​யில் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, நேற்று இரவு கைது செய்​யப்​பட்ட அனை​வரை​யும் போலீ​ஸார் விடு​வித்​தனர்.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல அனுமதிக்கக் கோரி 2-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்த போலீஸார். | படங்கள்: நா.தங்கரத்தினம் |</p></div>
100 நாள் வேலை புதிய சட்டத்தை திரும்பப் பெற வைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in