பொதுத் துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | கோப்புப் படம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | கோப்புப் படம்

Updated on
1 min read

தஞ்சாவூர்: அரசின் பொதுத் துறை நிறு​வனங்​கள் சரி​யான தலை​மைப் பண்பு இல்​லாத​தால் நஷ்டத்​தில் இயங்​கு​கின்றன என முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​தார்.

தஞ்​சாவூர் தொழில், வர்த்தக சங்​கம் சார்​பில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற சிறப்பு கருத்​தரங்​கில் பங்​கேற்​று, “வணி​கத்​தில் நெருக்​கடி​யான சூழலில் தலை​மைப்​பண்​பு” என்​கிற தலைப்​பில் முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் பேசி​யது: சிஏஜி தணிக்கை அறிக்​கை​யில் தமிழக அரசின் நிறு​வனங்​களுக்​கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்​றும், சராசரி மூலதனத்​தின் மீதான வரு​வாய் 0.8 சதவீதம் மட்​டுமே என்​றும் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு பொதுத்துறை நிறு​வனங்​கள் நஷ்டத்​தில்​தான் இயங்க காரணம் இயலாமை, தவறான நோக்​கங்​கள், செயல்​கள், போதிய தலை​மைப் பண்பு இல்​லாத​தால் வரி செலுத்​து​வோரின் பணம் வீணடிக்​கப்​படு​கிறது. அமைச்​ச​ராக இருந்​த​போது 2 ஆண்​டு​களில் 7,000-க்​கும் அதி​க​மான கோப்​பு​களை பார்த்​தது எனது சாதனை. நிதி, மனிதவள மேலாண்​மை, வளர்ச்​சித் திட்​ட​மிடு​தல் போன்ற துறை​கள் என்​னிடம் இருந்​தன.

நான் 2 ஆண்​டுகளில் ஏறத்​தாழ 7 ஆயிரம் கோப்​புகளில் 1,300 கோப்​பு​களை திருப்பி அனுப்​பினேன். இதனால்​தான் வரு​வாய் பற்​றாக்​குறை ரூ.62 ஆயிரம் கோடி​யில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி​யாக குறைந்​தது. வரலாற்​றில் செய்ய முடி​யாத மாற்​றத்தை நாங்​கள் செய்​தோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்​ன​தாக நிகழ்ச்​சிக்கு சங்​கத் தலை​வர் எம்​.எஸ்​.ஆசிப் அலி தலைமை வகித்​தார். செய​லா​ளர் சிடி.​ராம​நாதன், பொருளாளர் எஸ்​.​முத்​தை​யா, துணைத் தலை​வர் பிரபு, இணைச் செயலர் சுந்​தர​நா​ராயணன் உள்​ளிட்​டோர் பங்கேற்​றனர்.

<div class="paragraphs"><p>அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | கோப்புப் படம்</p></div>
வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in