வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு

வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 20 பில்லியன் டாலர் மதிப்பிலான கனடா பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரியை விதித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, வரும் செப்டம்பர் 8 முதல் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாகக் கனடா அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த புதிய வரி விதிப்பு, ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரையிலான சுமார் 5% கனடா ஏற்றுமதியைப் பாதிக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ஒப்பந்தத்தில் கனடாவின் இறையாண்மை, கலாச்சாரம் மற்றும் மொழிப் பாதுகாப்பைக் குறைக்கும் வகையிலும், வாகனங்களுக்கான வரி விலக்கைக் குறைக்கும் வகையிலும் அமெரிக்கா கடைசி நேரத்தில் புதிய நிபந்தனைகளை விதித்ததே பேச்சுவார்த்தை முறிவிற்குக் காரணம் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடாவின் இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீர், "கனடாவின் தொடர்ச்சியான பதிலடி நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கத் தொழிலாளர்களையும் விநியோகச் சங்கிலியையும் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். கனடாவின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். 

வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு
இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளை தாயகம் அழைத்து வர இலங்கை முயற்சி - ஐ.நா. வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in